தமிழகம்

தற்போது பள்ளித் திறப்பு இல்லை….முதல்வர் அறிக்கை….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு செல்லலாம்…. என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் 3-வது வாரத்திலிருந்து கடந்த 6 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட்டு, ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்கள் மட்டுமே கல்வி கற்க முடியும் என்கிற நிலை தான் இப்போது உள்ளது.

ALSO READ  பாலியல் அத்துமீறல்; பாய்ந்தது போக்சோ - விரைந்தது 3 தனிப்படை…?

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கற்க வேண்டுமெனில், தொலைக்காட்சிகளில் வரும் பாடங்களை பார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி சேனல் உள்பட பல்வேறு சேனல்களிலு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதையடுத்து மத்திய அரசு வழிகாட்டுதல்களின் படி, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்களின் ஒப்புதலுடன் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு வந்து சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லடாக் வாகன விபத்தில் இறந்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை-முதல்வர்

naveen santhakumar

நான் அரசியலுக்கு கட்டாயம்  வருவேன் : நடிகர் பார்த்திபன் 

News Editor

விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துகின்றனர் – கமல்ஹாசன்

naveen santhakumar