துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி-யுமான ரவீந்திரநாத்குமார், தனது பெயரில் உள்ள “குமார்” என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். மேலும், அவரது பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது, “P.RAVEENDRANATH” என எழுதிவந்தவர் தற்போது இதனை, “RAVINDHRANATH” என மாற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக கெஜட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவரது தந்தை, ஓ.பன்னிர்செல்வம், அவரது தந்தை வைத்த “பேச்சிமுத்து” என்ற பெயரை மாற்றி, “பன்னீர்செல்வம்” என வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.தற்போது, இவரது மகனும், தந்தை வைத்த பெயரிலிருந்து மாற்றம் செய்துள்ளார்.
நியூமராலஜி பார்த்து பெயரில் மாற்றம் செய்துள்ளாரா???? இல்லை அவரது அரசியல் நண்பர்கள் அவரை `ரவீந்திரநாத் ஜி’ என்று அழைப்பதால் குமாரை `கட்’ செய்யக் கூட நினைத்திருப்பாரா?????
சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், பெயர் மாற்றம் என்பது சில நன்மைகளைத் தேடித்தரும். அந்த வகையில், நீண்ட நாள் எதிர்பார்ப்பான, மத்திய இணை அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.