தமிழகம்

வேதாரண்யத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்….ஒருவழியாக அனைத்து குற்றவாளிகளும் கைது….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாகப்பட்டினம்:

வேதாரண்யத்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சொல்லப்படும் சண்முகசுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வந்த தாய்க்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில்,தாய்க்கு உதவியாக அவரது 16 வயது சிறுமி அங்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.அவ்வாறு வேலைக்குச் சென்ற 16 வயது சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் சண்முகசுந்தரம் மற்றும் அவரது நண்பர்கள் விஜயன், அரவிந்தன் ஆகியோர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கு உடந்தையாக அரவிந்தனின் மனைவி துர்காதேவி இருந்துள்ளார்.

ALSO READ  70 பெண்கள்..ஆபாச வீடியோ..நாகர்கோவில் காசி.. பகீர் தகவல்கள்.

இந்நிலையில், உணவக உரிமையாளர் சண்முகசுந்தரம், அவருடைய நண்பர்களான விஜயன், அரவிந்தன், மற்றம் அரவிந்தனின் மனைவி துர்காதேவி ஆகியோர் மீது வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்துள்ளார். சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 நபர்கள் மீது கடந்த மாதம் 1-ம் தேதி வழக்குப்பதிவு செய்த வேதாரண்யம் மகளிர் காவல் நிலைய காவலர்கள், விஜயன், அரவிந்தன் அவரது மனைவி துர்காதேவி ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த  நசண்முகசுந்தரம் நேற்று மாலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 16 வயது சிறுமிக்கு ஒரு பெண்ணே உடந்தையாக இருந்து கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.1லிருந்து பள்ளிகள் திறப்பு..!

Admin

வங்கக்கடலில் உருவாகியது புதிய புயல் !

News Editor

நாடு தழுவிய வேலை நிறுத்தம் தொடங்கியது

Admin