தமிழகம்

செம்பு வளையலில் தங்க முலாம் பூசி மோசடி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேலம்:

செம்பு வளையல்களில் தங்க முலாம் பூசி பல்வேறு  வங்கிகளில் அடகு வைத்து 30 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (38) மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

ALSO READ  வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை !  

மாதேஸ்வரன் செம்பு வளையல்களை வாங்கி அதில் தங்க முலாம் பூசிவிடுவார். அதன்பிறகு வங்கிகளுக்கு எடுத்துச் சென்று அடகு வைக்க வேண்டும் என்று கூறி கொடுப்பார்.இப்படி பல்வேறு வங்கிகளில் அடகுவைத்து மோசடி செய்துள்ளார். பல்வேறு வங்கிகளில் போலியான நகைகளை 30 லட்ச ரூபாய்க்கு அடகுவைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மோசடியானது வங்கி அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் வங்கி அதிகாரி புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மாதேஸ்வரனை கைது செய்தனர். மேலும் அவரது  கூட்டாளிகள் 2 பேரையும் தனிப்படை அமைத்து  போலீசார் தேடி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அத்தியாவசிய காய்கறி விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

naveen santhakumar

கோயம்பேட்டில் பேருந்தில் திடீர் தீவிபத்து!

News Editor

மாணவர்கள் பழைய பஸ் பாஸ் வைத்தே பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் -அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி :

naveen santhakumar