தமிழகம்

பிரச்சாரத்தின் போது கைது செய்யப்பட்ட உதயநிதி மற்றும் தொண்டர்கள் விடுதலை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருக்குவளை :

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குவது குறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று காலை திருச்சியில் திமுக நிர்வாகி ஒருவரின்  இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட உதயநிதி பின்னர் திருக்குவளைக்கு சென்றார். அங்கு பிரச்சாரத்தின் போது கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் இருந்த தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

ALSO READ  தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநிலத்திற்கான விருதினை வழங்கியது மத்திய அரசு !

இதனை தொடர்ந்து இன்று மாலை உதயநிதி ஸ்டாலின், அவருடன் கைதான திமுக தொண்டர்கள் உள்பட அனைவரையும் போலீசார் விடுதலை செய்தனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கைது சம்பவத்தில் மத்திய அரசின் பின்புலம் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக  திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.மேலும் உதயநிதியின் பிரசார பயணம் நாளை திட்டமிட்டபடி தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“தமிழ்நாட்டையே காணவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஷ் !

naveen santhakumar

கட்டில் மெத்தை கழிவறை வசதிகளுடன் டூரிசம்

News Editor

முதல்வன் பட பாணியில் உடனே கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:

naveen santhakumar