உலகம்

கொரோனாவால் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி பரிதாபமாக உயிரிழந்தார்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜோகன்ஸ்பர்க்: 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்வதினி நாட்டு பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி(52) திடீரென பரிதாபமாக உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில், ஆப்பிரிக்கா கண்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு எஸ்வதினி நாட்டையும் விட்டு வைக்கவில்லை. வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் இந்த நாடு, ஸ்வாசிலாந்து என்று முன்பு அழைக்கப்பட்டது.இங்கு கொரோனா தாக்கத்தால் 6,700 பேர் பாதிக்கப்பட்டு, 127 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த கொடிய கொரோனாவால் அந்நாட்டு பிரதமர் அம்ப்ரோஸ் லாமினியும் பாதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  சீனாவிற்குள் கொரோனாவை கொண்டுவந்தது அமெரிக்க ராணுவம் தான்- சீனா குற்றச்சாட்டு

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அவரது உடல்நிலை சீராகவும், எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் இருந்தார்.இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி தென் ஆப்பிரிக்காவிற்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.அங்கும் அவரது உடல்நிலை சீராக காணப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நேற்றைய தினம் பிரதமர் அம்ப்ரோஸ் லாமினி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டின் துணை பிரதமர் தெம்பா மசுகு அதிகாரப்பூர்வமாக  உறுதிப்படுத்தியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கடவுள் ராமர் சிறப்பு மரியாதை: அயோத்தியில் பூமி பூஜையை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ல் ஏற்பாடு… 

naveen santhakumar

தொடரும் தலிபான்கள் கொடுமை – ஆண்கள் தாடியை வெட்டக்கூடாது தாலிபான்கள் உத்தரவு

News Editor

2021 வரை நாட்டின் எல்லை மூடல்…

naveen santhakumar