சசிகுமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பிறகு குட்டிப்புலி, நாடோடிகள், பிரம்மன், கிடாரி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சசிகுமார்.
அதனையடுத்து இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நாடோடிகள் 2. இந்தப்படத்தினை இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.
அதனை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. அடுத்ததாக இவர் ராஜவம்சம், பரமகுரு, கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கு “பகைவனுக்கு அருள்வாய்” என பெயரிடப்பட்டு இயக்குனர் அனீஸ் இயக்கவுள்ளார்.
இவர் ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தை இயக்கிய இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “பகைவனுக்கு அருள்வாய்” படத்தில் கதாநாயகியாக வாணி போஜன், பிந்து மாதவி நடிக்கிறார்கள். அவரகள் தொடர்ந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் நாசர், சதிஷ் நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இதனை 4 மங்கீஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இத்தகவலை நடிகர் சசிகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.