தமிழகம்

ஜெயலலிதாவின் நினைவிடத்தை விரைந்து முடிக்க புதிய பொறியாளர் நியமனம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர்  ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு பகலாக பணிகள் நடந்து வருகிறது.

ALSO READ  தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பி.இ படிக்கச் ஏ.ஐ.சி.டி.இ அனுமதி !

கொரோனா தொற்று பரவல் காரணமாக பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் நினைவு மண்டபத்தில் அமைக்கப்படும் ஃபீனிக்ஸ் பறவைக்கான ராட்சத சிறகுகள் மற்றும் அதனை தாங்கி நிற்கும் கருவிகள் துபாயில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்துள்ளது. சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியை விரைந்து முடிக்க 3 மாதங்களுக்கு பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:

naveen santhakumar

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்..

Shanthi

5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குதாம் ?

News Editor