மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர்.
அதனையடுத்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக யாரும் உள்ளே நுழைந்து விடகூடாது என்பதற்காக காவல்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் டெல்லி புறநகர் எல்லையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் டெல்லியில் கடும் வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் ‘ஜக்கா ஜாம்’ எனும் சாலை மறியல் போராட்டத்தை இன்று முதல் முன்னெடுக்க இருப்பதாக அறிவித்திருந்தனர். ஆனால் இந்த ஜக்கா ஜாம் சாலை மறியல் போராட்டம் உத்திரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மட்டும் நடைபெறாது என பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,”உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் இன்று சாலை முற்றுகை இருக்காது, இந்த இடங்களில் சிலர் வன்முறையை பரப்ப முயற்சித்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளனஎனவே உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் சாலைகளைத் தடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். டெல்லியைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் சாலைகள் தடுக்கப்படும். காரணம், அவர்கள் எந்த நேரத்திலும் டெல்லிக்கு அழைக்கப்படலாம், எனவே அவர்கள் காத்திருப்பு நிலையில் வைக்கப்படுகிறார்கள்” என கூறியுள்ளார்.
#delhifarmer #farmeract #newfarmeract #rakeshtikait #bhartiyakisanunion #jackjam #tamilthisai