தமிழின் முன்னணி நடிகையான நயன்தாராவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்று கூறலாம். இவரின் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தினை பொறுத்தே நயன்தாரா தனது படங்களை தேர்வு செய்வார். 2017 ஆம் ஆண்டு வெளியான அறம், 2018 ஆம் ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா இமைக்கா நொடிகள், 2019ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஐரா, கொலையுதிர் காலம் ஆகிய திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.
பின்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் உடன் நடித்தார்.இந்நிலையில் zee cine விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இவ்விழாவில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் நயன்தாரா பிகில் மற்றும் விஸ்வாசம் படத்திற்கான favourite heroine விருதினை பெற்றுள்ளார்.
மேலும்,இந்த விருது விழாவிற்கு நயன் புடவை கட்டி வந்துள்ளார்.சேலையில் தங்கம் போன்று ஜொலிக்கும் நயன்தாராவை ‘உண்மையிலேயே நீ தங்கமே தான்’ என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.