மும்பை:-
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 39.69 கி.மீ. சாலை அமைத்து சாதனை படைத்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சாலை போடும் பணிகள் நடந்து வந்தது. இதில் அவர்கள் 24 மணி நேரத்தில் 39.69 கி.மீ. தூரம் சாலை போட்டு சாதனை படைத்து உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில்:-
சத்தாரா மாவட்டத்தில் பால்தன் முதல் மகாசுர்னே வரை 39.69 கி.மீ. தூரத்துக்கு கான்கிரீட் சாலை 24 மணி நேரத்தில் போடப்பட்டு உள்ளது. இது மாநில பொதுப்பணித்துறையினரின் சாதனையாகும். மேலும், இந்த சாதனை லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.
அமைச்சர் சவான் இந்த சாதனை படைத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளார்.
மாநில பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, சாலை அமைக்கும் பணி கடந்த ஞாயிறு காலை 7 மணிக்கு தொடங்கி, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு முடிந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.