பொன்வண்ணன் சரண்யா தம்பதிகளின் மகள் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சரண்யா, நடிகர் பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஹீரோயினாக இருக்கும்போதும் முன்னணி நடிகையாக இருந்தவர், தற்போதும் அம்மா கதாப்பாத்திரங்களில் முன்னணி நடிகையாக உள்ளார்.
பொன்வண்ணன் – சரண்யா தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தவர் பிரியதர்ஷினிக்கு விக்னேஷ் என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை சென்னை மணப்பாக்கத்தில், பிரியதர்ஷினியின் திருமண வரவேற்பு நடந்தது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் முதலமைச்சர், மணமக்களுக்கு மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக்கூடையை பரிசாக வழங்கினார்.