டெல்லி:-
டெல்டா பிளஸ் வைரஸை விட மிக தீவிரமான லாம்ப்டா என்ற உருமாறிய கொரோனா தொற்று பரவி வருவதாக நிபுணர்கள் தகவல் அளித்துள்ளனர்.
லத்தீன் அமெரிக்க நாடுகளில் எனப்படும் தென்னமெரிக்க நாடிகளில் லாம்ப்டா என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பெருநாட்டில் உருவான இந்த லாம்ப்டா கொரோனா வைரஸ் 30 நாடுகளில் பரவி விட்டதாக உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது.
லாம்ப்டா மாறுபாடு புதிய பிறழ்வு அல்ல, கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதத்தில் இருந்தே உள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவல் படி, லாம்ப்டா மாறுபாடு குறைந்தது 7 முக்கிய பிறழ்வுகளை கொண்டுள்ளதாக கூறியுள்ளது, ஏற்கனவே டெல்டாவில் மூன்று பிறழ்வுகள் உள்ளன.
இது பரவல் விகிதம் அதிகம் உள்ளிட்ட அதிகப்படியான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். மேலும் இயற்கை தொற்று அல்லது தடுப்பூசியின் மூலம் உருவாகியுள்ள ஆன்ட்டிபாடிகளுக்கு எதிரான மேம்பட்ட சக்தியை கொண்டிருக்கும்.
மேலும் சீனாவின் சினோவாக் தடுப்பூசியின் செயல்திறனை முறிக்கும் வகையில் அமைந்துள்ளது லாம்ப்டா மாறுபாடு என்றும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றனர்.
எனினும் பெரு நாட்டில் கண்டறியப்பட்டுள்ள லாம்ப்டா வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேசமயம், ஆசியாவில், இஸ்ரேலில் மட்டுமே இவ்வகை மாறுபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் அதிகம் உள்ள ஃப்ரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த மாறுபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.