டெல்லி:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (07.07.2021) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று மாலை ஆறு மணிக்கு இந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். இதனையொட்டி, ஏற்கனவே பதவிவகித்து வந்த பல்வேறு மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியில் இருந்து விலகியுள்ளனர்.
இதன்படி, ஹர்ஷ்வர்தன், தாவர் சந்த் கெலோட், ரமேஷ் பொக்கிரியால், சதானாந்த கௌடா, சந்தோஷ் கங்வார், தேபஸ்ரீ சௌதுரி, ரத்தன் லால் கட்டாரியா, சஞ்ஜய் தோட்ரே, பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் ரோசப் பாட்டீல், பாபுல் சுப்ரியோ, அஸ்வினி சௌபே ஆகிய 12 மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை பதவியேற்கவுள்ள புதிய அமைச்சர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
ஜோதிராதித்ய சிந்தியா, பசுபதி குமார் பராஸ், பூபேந்தர் யாதவ், அனுப்ரியா படேல், ஷோபா கரண்ட்லாஜே, மீனாட்சி லேக்கி, அஜய் பட், அனுராக் சிங் தாக்கூர், நாராயண் தாட்டு ரானே, சர்பானந்த சோனோவால், வீரேந்திர குமார், கிரண் ரிஜிஜு, கிஷண் ரெட்டி, அனுபமா தேவி, அஷ்வினி வைஷ்ணவ், சாந்தனு தாக்குர், பிஸ்வேஸ்வார் துடு, கவுசல் கிஷோர், ஏ.நாராயணசாமி, அன்னபூர்ணா தேவி, பி.எல். வர்மா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் பெயரும் இடம்பெற்றுள்ளது. எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மொத்தம் 43 பேர் பதவியேற்கவுள்ளனர், புதிய அமைச்சரவையில் 27 ஓபிசி, 12 எஸ்சி, 8 எஸ்டி மற்றும் 11 பெண்கள் அமைச்சர்கள் இடம்பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.