புதுடில்லி
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினை முழுமையாக செலுத்தியவர்கள் இந்தியா வரும்போது அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை.
ஆனால் இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரானா தொற்று பரிசோதனையின் எதிர்மறை (நெகடிவ்) சான்றிதழை மத்திய அரசின் ஏர் சுவீதா போர்டலில் பதிவேற்ற வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடர்பாக இந்தியா மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினை முழுமையாக செலுத்திய நபர்கள் ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.