செங்கல்பட்டு:-
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் அமைந்துள்ளது. இது நீண்ட காலமாக செயல்படவில்லை.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் வேக்சின் தயாரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
இதில் மத்திய அரசு துரிதமான நடவடிக்கை எதையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதோடு அனுமதியும் வழங்கவில்லை .
இந்நிலையில் மத்திய அரசிடம் பாரத் பயோடெக் நிறுவனம் உள்பட மேலும் 2 நிறுவனங்கள் இங்கு தடுப்பு மருந்து தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது
இதில் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு வேக்சின் தயாரிக்க அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தடுப்பு மருந்து தயாரிக்கப்படுவதால் கூடுதல் தடுப்பு மருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.