சென்னை:
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா சில மாதங்களுக்கு முன்பு விடுலை அடைந்து தமிழகம் திரும்பினார்.
விடுலை பெற்று தமிழகம் திரும்பும் போது தொண்டர்கள் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தது அனைவருக்கும் ஆச்சரியமூட்டியது.
இதைத்தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. சசிகலா ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்மா முன்னேற்ற கட்சிக்கும் ஆதரவு வழங்கத்ததோடு
அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும் அறிவித்தார்.
தற்போது என்னை விலகி இருக்கும் படி யாரும் நிர்பந்திக்கவில்லை என்று சசிகலா கூறியுள்ளார். அதோடு என்னை விலகியிருக்கும் படி யாரும் நிர்பந்திக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவினர் ஒன்றாக இருந்து சட்டப் பேரவை தேர்தலை சந்தித்து இருந்தால் வெற்றி பெற்றிருப்பார்கள் எனவும் தனித்தனியாக நின்று தோற்று விட்டார்கள் எனவும் கூறியுள்ளார். அதிமுக வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.