தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கால் டாக்சி நிறுவனமான ஓலா-வின் எலெக்ட்ரிக் உற்பத்தியை விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது. இதனிடையே எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ஆரம்பித்துள்ளதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா நிறுவனம் உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையை தமிழகத்தில் அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததோடு ரூ.2400 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலை அமைக்கப்படும் என சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் ரூ . 499 ஐ olaelectric.com தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.