இந்தியா

3 லட்சம் மாத்திரைகள், 2000 சானிடைசர், 10 ஆயிரம்மாஸ்க்; கொரோனாவிலிருந்து விடுபட சாய்பாபாவுக்கு அலங்காரம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால் இந்தியாவில் விரைவில் 3வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒருசில மாநிலங்களில் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் 3-வது அலை உருவாக வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருவதால், கொரோனா 3-வது அலை பாதிப்பு குறித்த அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது.

இதனிடையே, பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்கள் விடுபடவும், 3-வது அலை உருவாகாமல் இருக்கவும் மக்கள் வித்தியாசமாக வழிபாடு நடத்தியுள்ளனர்.

ALSO READ  ஊழியருக்கு கொரோனா: ஆளுநர் மாளிகை மூடல்…
Bangalore's Sai Baba Temple Gets Adorned With 3 Lakh Tablets, Masks &  Sanitisers; To Be Given To Needy

இதன்படி, 3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முகக்கவசங்கள், 2 ஆயிரம் சானிடைசர் பாட்டில்கள் மற்றும் உணவு தானியங்கள், பழங்கள், இதர உணவு பொருட்களைக் கொண்டு பிராமாண்டமாக சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வேண்டி வழிபட்டனர்.

இந்த வினோத வழிபாட்டில் தேஜஸ்வி சூர்யா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொடங்கியது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல்?

Shanthi

பிகாரின் குந்தன் குமார் எனும் மாணவனின் பெற்றோர்களா….! பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மியும், நடிகை சன்னிலியோனும்..!

News Editor

மூன்றாண்டு படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம்…

naveen santhakumar