சென்னை
கொரோனா பரவல் காரணமாக ஒன்றறை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகள் இணையவெளி மூலம் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகின்றன.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே மாநில அரசு பள்ளிக்கல்வி துறை மூலம் கல்வித் தொலைக்காட்சி தொடங்கி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பெரும்பாலும் கலவி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.சில நேரங்களில் இணையவெளி மூலமாக வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கல்வி தொலைக்காட்சியின் மூலம் மாணவர்களுக்கு சிறப்பாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் அரசுப் பள்ளியை நாடி வருவது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.