தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பூமிக்கு அருகில் வரும் சனிக்கோளை வெறும் கண்களால் இன்று காண முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இன்றிரவு அனைத்து பகுதிகளில் இருந்தும் சனிக்கோளை பொதுமக்கள் காணலாம். சாதாரணமாக பைனாகுலர் மூலம் சனிக்கோளின் வளையத்தைக் காணலாம்.
மேலும், வெறும் கண்களால் பார்க்கும் போது சனிக்கோள் விண்மீன் போலத் தெரியும். ஆனால், நவீன தொலைநோக்கி மூலம் பார்த்தால் வளையத்துக்கும் கோளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நன்றாக பார்க்க முடியும் என்று ஒடிசாவின் பதானி சமந்தா கோளரங்க துணை இயக்குனர் சுவேந்து
பட்நாயக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 20, 2020 அன்று இது போன்ற நிகழ்வு நடைபெற்றது. இனி வரும் 2022 ஆண்டு ஆகஸ்ட் 14 தேதியன்று மீண்டும் இந்நிகழ்வு நடைபெறும் பதானி சமந்தா கோளரங்க துணை இயக்குனர் சுவேந்து
பட்நாயக் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.