எனக்கே ரெட் கார்டா…. நடுவரை தாக்கிய கால்பந்து வீரர்
ஜெர்மனியில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டியில் கால்பந்து வீரர் ஒருவர் ரெட் கார்டு கொடுத்த நடுவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் எப்.எஸ்.வி மியும்ஸ்டர் அணி வீரர் ஹெஸ்லி விளையாடும்போது விதிகளை மீறி விளையாடியதாக சக வீரர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆட்டத்தின் நடுவர் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்தார். மேலும் அவர் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டார்.
ஆனால் நடுவர் இந்த நடவடிக்கைக்கு கடுப்பான ஹெஸ்லி அவரிடம் வாக்குவாதம் செய்ததோடு மட்டுமல்லாமல் அவர் முகத்தில் கடுமையாக தாக்கினார்.
இதனை சற்றும் எதிர்பாராத நடுவர் நிலைகுலைந்து போனார். உடனடியாக மற்ற வீரர்கள் நடுவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய கால்பந்தாட்ட நிர்வாகிகள் ஹெஸ்லிக்கு மூன்றாண்டுகள் தடையும்,அவரது அணிக்கு ஆறு மாதங்கள் தடை மற்றும் 553 டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.