உலகம்

மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் பலி- நடந்தது என்ன?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜப்பானில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona-Impfung - EU kauft bis zu 1,8 Milliarden weitere Biontech-Dosen -  Wiener Zeitung Online

மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்ட சில நாட்களிலேயே 30 வயது மதிக்கத்தக்க இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, அவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியில் உலோகத் துகள்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாகவும் ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ALSO READ  பதிவியேற்பு விழாவிற்கு டிரம்புக்கு அழைப்பு விடுக்கும் ஜோ பிடன் :

மேலும், தடை செய்யப்பட்ட மூன்று உற்பத்தி மையங்களிலிருந்து வந்த தடுப்பூசிகளை தான் இறந்தவர்கள் செலுத்தி கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். கலப்படம் இருந்ததால் தான் தடுப்பூசி விஷமாக மாறியிருக்கிறது. எப்படி கலப்படம் நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.

ALSO READ  காதலிக்க பெண் தேடிய கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட சோகம்

சர்ச்சைக்குரிய பேட்ச் எண்களைக் கொண்ட தடுப்பூசிகள் முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்டுள்ளன. தேவையில்லாமல் யாரும் குழம்ப வேண்டாம் என மாடர்னா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா அதிகரிப்பு: குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்.. அதிரடி அறிவிப்பு!

naveen santhakumar

இம்ரான் கான் தலைமையில் “பொம்மை ஆட்சி நடக்கிறது”……. நவாஸ் ஷெரிப் குற்றச்சாட்டு……

naveen santhakumar

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாக்கி-உர்-ரஹ்மான் கைது..!

News Editor