புதுடெல்லி
இப்போது பள்ளிகளை அவசரப்பட்டு திறக்க வேண்டாம் என்று எய்ம்ஸ் பேராசிரியரும், மருந்து துறையின் தலைவருமான நவீத் விக் தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல்வேறு மாநிலங்களில் குறைந்து வருகிறது. கேரளா மாநிலம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாகிக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் பள்ளிகளை திறக்க பல மாநில அரசுகள் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. தமிழ் நாட்டில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பள்ளிகளை திறக்க பல மாநில அரசுகள் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. தமிழ் நாட்டில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கொரோனா மூன்றாவது அலை தொடர்பான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா 3ஆவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் தொடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.