தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட சுகாதார துணை இயக்குநர்கள் அந்தந்த கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.