சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முதல்வர் மற்றும் நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள தலைவி திரைப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்குகளில் ‘தலைவி’ வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
ஆனால், கரோனா அச்சுறுத்தலால் வெளியீட்டை ஒத்திவைத்தது படக்குழு. தற்போது இத்திரைப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.இந்த படத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பல்வேறு தடைகளை கடந்து முதல்-அமைச்சர் ஆவது வரை உள்ள காட்சிகள் இடம்பெற்று உள்ளது.
M. Yamunarani…..