திருவள்ளூர்:
தமிழ் நாடு அரசு பல்வேறு வழிகளில் கொரோனா தொற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. மாஸ்க் அணிவது, பொது வெளியில் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, குறிப்பிட்ட இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற பெரும் முயற்சியில் தமிழ் நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தொற்றை தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் ஈடுபட்டு வந்தாலும் பொதுமக்கள் மத்தியில் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இன்னும் தடுப்பூசி போட மக்கள் தாக்கம் காட்டுகின்றனர்.
கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுள்ளார். புது முயற்சியாக கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் மீம்ஸ் போடுபவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.