தமிழகம்

இரண்டு நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இதர 28 மாவட்டங்களில் தற்செயல் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இவ்விரு நாள்களிலும் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 6, 9-ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பொது  விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு || Local body election held 9 districts  october 6 and 9 public holiday

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளை மற்றும் வருகிற 9ஆம் தேதி நடைபெறுகிறது.

நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று (அக்டோபர் 4) மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு பெற்றது.

ALSO READ  செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறப்பு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதர 28 மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் தற்செயல் தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதியில் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னதாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் 9 மாவட்டங்களிலும் 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

இந்த அறிவிப்பினை அந்தந்த மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பள்ளிகள் தேர்தல் வாக்குசாவடி மையங்களாக செயல்படுவதாலும், தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

108 ஆம்புலன்ஸ் வர தாமதம்… பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு நடுரோட்டில் பிரசவம் பார்த்த எழுத்தாளர் ஆட்டோ சந்திரன்….

naveen santhakumar

கும்பகோணம் பள்ளி தீ விபத்து- 17ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

naveen santhakumar

உயர் நீதிமன்றதில், பள்ளிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தல்..!!

Admin