புனித் ராஜ்குமார் மறைவு காரணமாக பெங்களூரு நகரில் 144 தடை உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் இன்று மதியம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று மதியம் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. மேலும் பெங்களூரில் உள்ள பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், மைசூரு உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய நகரங்களில் அடைக்கப்பட்டது. தலைநகர் பெங்களூரில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.
இதனிடையே நடிகர் புனித் ராஜ்குமார் காலமானதை அடுத்து பெங்களூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் திரையரங்குகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. பெங்களூர் நகர் முழுவதும் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.