போபால்/சென்னை
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக எல்.முருகன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதுபோன்று தமிழ் நாட்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் அஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
புதுச்சேரியிலும் பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த ஜூலையில் ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்றார்.
ஆனால் முருகன் எந்த ஓரு சபையிலும் உறுப்பினராக இல்லை. எனவே மத்திய பிரதேசம் போபாலில் முருகன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மத்திய பிரதேசத்தில் 95 உறுப்பினர்களை கொண்ட பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், தனது வேட்பாளர் யாரையும் நிறுத்தவில்லை. எனவே, எல்.முருகன் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழ் எல்.முருகனிடம் வழங்கப்பட்டது.
தமிழ் நாட்டில் ராஜ்யசபா எம்.பி.,யாக தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.எனவே ராஜ்யசபாவில் தி.மு.க உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுபோன்று புதுச்சேரியிலும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ., கூட்டணி சார்பில், பா.ஜ., வேட்பாளர் செல்வகணபதியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.