தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கோயம்பத்தூர்
துபாயில் நடைபெற உள்ள சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டிக்கு கோயம்பத்தூர் ராம்நகரைச் சேர்ந்த சிவகுமார் கோமதி ஆகியோரின் மகன் 6 வயதுடைய ராணா தேர்வாகியுள்ளார்.
துபாயில் வரும் 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சர்வதேச சிறுவர்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் 15 நாடுகளை சேர்ந்த ஏராளமான மாடல்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
சர்வதேச ஜூனியர் ஃபேஷன் ஷோவின் இறுதிப் போட்டியில் பங்கேற்க ராணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இருந்து இவ்வளவு பெரிய பேஷன் ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்ற முதல் சிறுவன் ராணாதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணா தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் மற்றும் ஒரு வணிக குடும்பத்தில் இருந்து வந்தவர். ராணாவின் தந்தை சிவகுமார்ஜவுளிக்கடையும், அவரது தாயார் கோமதி அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.