சாதனையாளர்கள் தமிழகம்

டெல்லியில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலையில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. வாகன போக்குவரத்து வழக்கத்தைவிட மெதுவாகவே இருந்தது. விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக, விமானங்களை அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டதால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பயணிகள் முன்பதிவு செய்துள்ள விமானங்களுக்கான பயண நேரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டு அறிந்துகொள்ளும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் டெல்லியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மே 30 ஆம் தேதி வரை வெப்ப அலை இருக்காது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

9 மாவட்டங்களில் மது விற்பனைக்கு தடை – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

News Editor

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; தமிழகம் வரும் உயர்மட்ட குழு !

News Editor

நளினிக்கு பரோல் கேட்டு தாய் வழக்கு… தமிழக அரசு சொன்னது என்ன?

naveen santhakumar