தமிழகம்

செக்கிங் இன்ஸ்பெக்டரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறார் வதையில் ஈடுபட்டதாக கடந்த இரண்டு நாள்களில் இரண்டு பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தின சிவா. கட்டட தொழிலாளியான இவர் அந்தப் பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. ரத்தின சிவா தொடர்ந்து பல நாள்கள் மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி ரத்தின சிவாவை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

ALSO READ  கொரோனா தொற்றால் பலியானவர்கள் குடும்பத்திற்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகள் பின்பற்றப்பட வேண்டும்..!!

ரத்தின சிவா

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மயிலாடியைச் சேர்ந்த குருசாமி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் தம்பதியின் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

செக்கிங் இன்ஸ்பெக்டர் குருசாமி

இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் அழுதபடியே கூற, அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, குருசாமியை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர். இத்தகைய சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதுபான டோக்கங்களை கலர் ஜெராக்ஸ் எடுத்த மதுப்பிரியர்கள் கைது.. 

naveen santhakumar

வங்கி ஊழியர்கள் திட்டியதால் விவசாயி தற்கொலை…!

News Editor

சாதனை ஊக்கத்தொகை… தமிழ்நாடு அரசு அதிரடி!

naveen santhakumar