தமிழகம்

செக்கிங் இன்ஸ்பெக்டரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறார் வதையில் ஈடுபட்டதாக கடந்த இரண்டு நாள்களில் இரண்டு பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தின சிவா. கட்டட தொழிலாளியான இவர் அந்தப் பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. ரத்தின சிவா தொடர்ந்து பல நாள்கள் மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவரின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி ரத்தின சிவாவை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

ALSO READ  கொரோனா நிவாரண நிதி நடிகர் அஜித் 1.25 கோடி....

ரத்தின சிவா

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மயிலாடியைச் சேர்ந்த குருசாமி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் தம்பதியின் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

செக்கிங் இன்ஸ்பெக்டர் குருசாமி

இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் அழுதபடியே கூற, அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, குருசாமியை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர். இத்தகைய சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதுக்கோட்டையில் பரபரப்பு; கல்லூரி மாணவி குத்தி கொலை !

News Editor

தமிழகத்திற்கு மஞ்சள் அலார்ட்….வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..

naveen santhakumar

ஆபாச செயலிகளுக்கு விரைவில் தடை – தமிழக காவல் துறை

Admin