உலகம்

Corona வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை… கண்ணீர்விட்ட மருத்துவர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டுள்ள Corona வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தையை பார்த்து மருத்துவர் அழும் வீடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட Corona வைரஸ் பாதிப்பு தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அங்கு வாழ்ந்து வரும் அயல் நாடுகளை சேர்ந்தவர்களை அந்தந்த நாடுகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை சீனாவில் Corona வைரஸ் பாதிப்பால் 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  பார்ட்டிக்குச் சென்ற தாயால் 3 வயது குழந்தை பரிதாப பலி

இந்த நிலையில் Corona வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று கண்ணாடியால் மூடப்பட்ட தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை வெளியில் இருந்து பார்க்கும் மருத்துவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

ஏதுமறியாத அந்த பிஞ்சு குழந்தை வெளியே இருக்கும் மருத்துவரை கை காட்டி சைகை செய்து சிரிக்கிறது. இந்த வீடியோ அனைவரிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது. விரைவில் Corona வைரஸ் பாதிப்பிலிருந்து அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற பிரார்த்தனை உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; பதவி ஏற்ற முதல் நாளே ஜோ பைடன் அதிரடி !

News Editor

மாஸ்க் அணியாமல் வாகன பேரணியில் ஈடுபட்ட அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ‌அபராதம் :

Shobika

21 ஆம் நூற்றாண்டைச் சந்தித்த மத்திய காலம் – முன்முறையாக Gym-ஐ கண்ட தலிபான்கள்

naveen santhakumar