காதலை யாரது முதலில் சொல்வது நீயா இல்லை நானா… என்ற போட்டி எப்போதுமே காதலிப்பவர்களுக்கு இருக்கும். அது போட்டி மனப்பான்மை கிடையாது.அது ஒரு அழகான செல்ல குறும்புகள்.
நிச்சயம் காதலை சொல்வது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. காரணம் நிறைய பேருக்கு நிறைய கனவுகள் இருக்கும். காதலை இப்படித்தான் தனது துணை வெளிப்படுத்த வேண்டுமென்று. இதில் நம்மில் பலருக்கு எப்படி propose செய்ய வேண்டும் என்றே தெரியாது. உண்மையிலேயே காதல் மிகவும் அழகான உணர்வு. அதனால்தான் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தின் முந்தைய 6 நாளும் காதலர் தினமாகவே கொண்டாடப்படுகிறது.
இன்றைக்கு நீங்க லவ் பண்றவங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு ரோஸ் வாங்கியாவது உங்க காதலை வெளிப்படுத்துங்கள். ஏற்கனவே லவ் பண்ணிக்கிட்டு இருக்கிறவங்க திரும்ப சொல்றது ஒன்னும் தப்பு இல்ல. ஆனால் ஒரு கிப்ட் கொடுத்து வித்தியாசமா சொல்றதுக்கு ட்ரை பண்ணுங்க.
கண்டிப்பா எல்லோருக்குள்ளேயும் நிச்சயம் ஒரு காதல் இருக்கும். ஆனால் சுத்தி இருக்கிறவங்க மத்தியில் சிங்கிள் தான் கெத்து வாழ்ந்துட்டு இருப்போம். அப்படி ஏதும் இல்லாம உங்களுக்கு பிடித்த பொண்ணுகிட்ட போய் உங்களோட காதலை சொல்லுங்க நிச்சயம் ஜெயிக்கும்.
அதேசமயம் யார் மேலேயும் எனக்கு காதல் இல்ல அப்படின்னு சொல்றவங்க உங்க மனசுக்கு ரொம்ப பிடிச்சவங்க யாரோ, உங்க மேல ரொம்ப அன்பா இருக்கிறது யாரோ அவங்களுக்கு ஒரு ரோஸ் வாங்கி கொடுத்து அவங்கள பத்தி பெருமையா சொல்லுங்க.
அனைவருக்கும் இனிய propose day தின நல்வாழ்த்துக்கள்.