இன்றையகாலக்கட்டத்தில் பெண்களுக்கு திருமணமாகி, பல வருடங்களாகியும் அவர்கள் கருத்தரிப்பதில்லை. இதனால் அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற ஏக்கம் தலைத்தூக்குகிறது.
இதன் காரணமாக குடும்ப பிரச்சனைகள் வெடிக்கின்றன. ஒரு பெண் எந்தெந்த நாட்களில் தனது கணவருடன் சேர்ந்தால் கருத்தரிக்க வாய்ப்புண்டு என்பதை தெரிந்துகொண்டு இணைந்தால் குழந்தைபேறு ஏற்பட 90% வாய்ப்புண்டு.
மாத விலக்காகும் நாளிலிருந்து முதல் மூன்று நாட்கள் தள்ளி நான்காம் நாளிலிருந்து 16ஆம் நாள் வரை உடலுறவு வைத்துக்கொள்ளும் நேர்வில் எளிதாக கருத்தரிக்கலாம். இந்த 4 முதல் 16 நாட்களில் கருப்பை திறந்திருக்கும். இதற்குப் பிந்தைய நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும் என்பதே இதன் பின் இருக்கும் ஆழமான கருத்தாகும்.
இதில் 5,6 மற்றும் 7 ஆகிய நாட்களில் உடலுறவு வைப்பதை தவிர்க்கலாம். ஏனெனில் 5,6 மற்றும் 7 ஆகிய நாட்களில் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் அந்த குழந்தைகள் ஒழுக்கத்திலும், ஆயுளிலும் ஏதேனும் குறைகளோடு பிறக்க வாய்ப்புள்ளதாக பழைய சாஸ்திரங்கள் குறிப்பிடும் குறிப்பிட்டுள்ளன.
மேலும் பாயும் உயிரணுவானது கருமுட்டையின் அருகில் சென்று விழும்போது அதன் ஆயுள் நீடித்து இருப்பதால் பிறக்கும் குழந்தையும் அதிகப்படியான ஆயுளுடன் வாழும் எனவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல பாயும் உயிரணுவானது நேரடியாக கருமுட்டையின் அருகில் விழாமல் சற்று தூரம் நீந்திச் சென்று கரு முட்டையை அடையும் போது அந்த உயிரணுவின் ஆயுள் முன்பை விட சற்று குறைகிறது. எனவே அதன் ஆயுளானது முன் சொல்லப்பட்ட காலத்தைவிட குறைவான ஆயுளை பெறுகிறது.
ஒரு சிலருக்கு 28 நாட்களும், ஒரு சிலருக்கு 32 நாட் களுமாக மாதவிடாய் சுழற்சி ஏற்படும். 28 நாட்கள் மாத விடாய் சுழற்சி ஏற்படுபவர்கள் மொத்த நாட்க ளில் இருந்து 18 நாட்களை கழித்து இடைநாட்களான 10 நாட்களில் உடலுறவுக் கொள்ளவேண்டும். 32 நாட்கள் உள்ளவர்கள், மொத்த நாட்களில் 11 நாட்களை கழித்து இடைப்பட்ட 21 நாட்களில் உடலுறவுக் கொள்ளலாம்.
இந்தக் கருத்துக்களை திருமூலர் தனது நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.