ரொம்ப பிஸியான திரிஷா முக்கியத்துவம் இல்லாத கதைகளுக்கு நோ சொல்கிறார்…….
தமிழ் திரையுலகில் இன்றும் கனவு கண்ணியாக வளம் வருபவர் திரிஷா. இவர் பல்வேறு முன்னனி மற்றும் இளம் நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்வு செய்து வருகிறார்.
1999 இல் சென்னையின் அழிகியாக தேர்வு செய்யப்பட்டார் திரிஷா. மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் காலடி எடுத்துவைத்தார். இதையடுத்து 2003 மற்றும் 2004 இல் வெளிவந்த சாமி,கில்லி ஆகிய இரண்டு படங்களும் திரிஷாவுக்கு சினிமாவில் பெரிய இடத்தை உருவாக்கியது.இது மட்டும் இல்லாமல் 2004 இல் தெலுங்கில் வெளியான வர்ஷம் என்ற படம் திரிஷாவுக்கு சினிமாவில் மற்றுமொரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் 2010 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான பட்டியலில் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து பட வரிசையில் பல்வேறான கதாபாத்திரங்களை முழுமையான பாத்திரமாகவே நடித்து தனித்திறமையை வெளிப்படுத்தியவர். மகள்களுக்கான சிறந்த கதாபாத்திரத்தில் அபியாக வளம் வந்து அப்பா மகளின் பாசத்தை அற்புதமாக வெளிப்படுத்தினார். இதே வரிசையில் ஜெஸியாக காதலும் காதலின் முக்கியத்துவத்தையும் தன் எதார்த்தமான நடிப்பில் அசத்தியுள்ளார். தனக்கென தனிஇடம் பிடித்த படங்களில் சிறிய இடைவெளிக்கு பின்பு ஜானுவாக களமிறங்கி காதலுக்கே தன்னை உதாரணம் காட்டினார் திரிஷா…..
தற்பொழுது சில படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களுக்கு நோ சொல்லி வருகிறார். நயன்தாரா, அனுஷ்கா போன்று தானும் தனக்கென சிறந்த கதாபாத்திரத்தை மட்டுமே தேர்வு செய்யப்போவதாக கூறியுள்ளார். இதுபோன்ற சப்ஜெட்டுகளுடன் ஸ்டார்நடிகர்களின் வாய்ப்பு வந்தாலும் நயன்தாரா போல அதை ஏற்று நடித்து வருகிறார்.திரிஷா தற்பொழுது தெலுங்கில் உருவாகவுள்ள சிரஞ்சீவியின் 152 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்துள்ளார்.
நயன்தாரா அனுஷ்கா வழியில் இனி திரிஷாவையும் எதிர்பாக்கலாம் ….