தினமும் உணவில் நெய் சேர்க்க வேண்டும் – ஏன் தெரியுமா?
‘நெய் இல்லா உணவு பாழ்’ என்ற கூற்று உண்டு. காரணம் நெய்யில் அவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளன. நெய்யின் மணம் நிச்சயம் அனைவரையும் சுண்டி இழுக்கும். ஆனால் பலருக்கு அது ஒத்துவராத ஒரு திரவம். ஆனால் நெய்யை தினமும் உணவில் சேர்த்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
நெய் சாப்பிட்ட்டல் உடலில் கொழுப்புகள் கூடும் என சொல்லப்படுகிறது. உண்மையில் நெய் இரண்டு வகையான கொழுப்புகளின் கலவையைக் கொண்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் அது உடலுக்கு நன்மை பயக்க கூடியதாகவே உள்ளது. நெய் அனைத்தும் இயற்கையாக உருவாவதால் அதில் ஆரோக்கியமற்ற சேர்க்கைகள், பாதுகாப்புகள் அல்லது டிரான்ஸ் கொழுப்புகள் போன்றவை இல்லை.
நெய்யில் உள்ள லினோலிக் அமிலம் (சி.எல்.ஏ) புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த அமிலம் இதய நோய்களை எதிர்த்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
நெய்யில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இதன் ஒரு பகுதியான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் பக்கவாதம், இதய அடைப்பு மற்றும் இதய செயலிழப்பு போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.
நெய் பல நூற்றாண்டுகளாக தோல் பராமரிப்பானாக பயன்படுகிறது. ஏனெனில் இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் வறண்ட சருமம் மற்றும் கூந்தலுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தை அளித்து புத்துணர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
என்னதான் நெய் ஆரோக்கியமானது என்றாலும் ஒரு நாளைக்கு 2-3 டிஸ்பூன் அளவு மட்டுமே நெய் சேர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.