ஜோதிடம்

மாசி மாத பலன்கள்… எதையும் துணிச்சலுடன் செய்யும் மேஷ ராசிக்காரர்களே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்த மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாயும் மேஷத்திற்கு யோகாதிபதியான குருவும் இணைந்து ஒன்பதாம் இடத்தில் இருப்பது மிகச்சிறந்த யோகமாகும்.

மேலும் ராசிநாதன் உடன் இணைந்த குரு ராசியைப் பார்ப்பது அதை விட மேலான சிறப்பான பலன்களை தரும். இந்த மாதம் முழுவதும் மேஷத்திற்கு சாதகமான கிரக நிலைகள் காணப்படுகின்றன.மூன்றாம் இடத்தில் இருக்கும் ராகு எந்த ஒரு செயலையும் துணிச்சலுடன் செய்வதற்கான தன்னம்பிக்கை தருவார்.வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.பத்தாம் இடத்தில் இருக்கும் சனி சற்று கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலையையும் மேஷ ராசி அன்பர்களுக்கு கொடுப்பார்.

பத்தாம் இடத்தில் இருக்கும் சனி தன்னுடைய மூன்றாம் பார்வையால் 12 ஆம் வீட்டை பார்ப்பதால் வீண் விரயங்களை ஏற்படுத்தும்.வழக்குகள் தொடர்பான விஷயங்களில் இந்த மாதத்திற்குள் வெற்றி கிட்டும். உயர்கல்வியில் மேன்மை உண்டாகும். தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும்.தம்பதியருக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைய ஆரம்பித்து விடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

ALSO READ  2020 ஆம் ஆண்டு துலாம் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

ஏழாம் அதிபதியான சுக்கிரன் 12 ஆம் வீட்டில் உச்சம் பெற்று ஆறாம் வீட்டை பார்ப்பதன் மூலம் தொழில் கூட்டாளிகள் அல்லது வாழ்க்கைத்துணையின் மூலமாகவோ வீண் விரயங்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.இயற்கை பாவ கிரகமான சனி பெரும் கேந்திரமான பத்தாம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.எல்லாவித வியாபாரங்களும் மேலோங்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலை நிலவும்.வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும்.

ALSO READ  எபோலா வைரஸை கண்டறிந்த விஞ்ஞானிக்கு கரோனா வைரஸ்…

எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும் இந்த மாதம் முழுவதும் உற்சாகமான மனநிலை காணப்படும்.மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள் அன்று நீண்ட தூர பயணங்கள் புதிய முயற்சிகள் தொடங்குவதை தவிர்க்க வேண்டும்.

சந்திராஷ்டம நாட்கள்: 15ஆம் தேதி இரவு முதல் 18-ம் தேதி அதிகாலை 5..30 வரை

வழிபட வேண்டிய தெய்வம் : ஹயக்ரீவர்

இந்த ஜோதிட பலன்களை கணித்தவர் திருமதி. ஜனனி ஸ்ரீதர் (DNA astrologer) . மேலும் சந்தேகங்கள் மற்றும் பலன்களுக்கு astrotamiltalk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

மேலும் காணொளியில் காண: https://bit.ly/2OukP6E


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யோகிபாபுவுக்கு நடராஜன் வாழ்த்து !

naveen santhakumar

கொரோனா வைரஸ் பரவல்…. தனது வலிமையைகாட்டும் வடகொரிய அதிபர் கிம்….

naveen santhakumar

10 வருடத்துக்கு ஒரு ஹிட் கொடுப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான், ஆஸ்கர் எனக்கு முக்கியமல்- பாலகிருஷ்ணா சர்ச்சை

naveen santhakumar