தமிழகம்

பள்ளி பொது தேர்வில் மாற்றம் – மார்ச், ஏப்ரலில் நடைபெறாது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக பள்ளிக்கல்வித்துறை பொதுதேர்வுக்களை நடத்துவதில் சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாகவும், நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஆனால் சமீப காலமாக மழை, பண்டிகை விடுமுறை என மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஃபீனிக்ஸ் மாலுக்கு சென்றுவந்த தம்பதிகளுக்கு கொரோனா...

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை பொதுதேர்வுக்களை நடத்துவதில் சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டில் மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதும் வெளியாகாவில்லை. இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டதும் கல்வி அமைச்சர் இது குறித்து அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது. ஆனால் இந்த வருஷம் ஆல் பாஸ் கிடையாது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக பட்ஜெட் 2021: பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி குறைப்பு- நிதி அமைச்சர்

naveen santhakumar

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட்

naveen santhakumar

வீடுகளில் தனிமைப்படுத்தும் வசதி இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

News Editor