தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திருநள்ளாறு:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப் பெயர்ச்சி இன்று நடந்தது.
அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சனீஸ்வரருக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள் உள்ளிட்ட 27 திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.அதனையடுத்து அதிகாலை 5:22 மணிக்கு சனீஸ்வரர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். சனி பகவானுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக நளன் குளத்தில் குளிக்க கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. கூட்டத்தை கண்காணிக்க தேரடி வீதி உள்பட பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.