சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்து பாடகி சின்மயி வாயை பிளந்து உள்ளார்.
“பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக சமந்தா அறிமுகமானவர். இதனை தொடர்ந்து நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் சமந்தா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா-வை திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், காலண்டர் போட்டோ ஷூட் ஒன்றில் ஓவியர் ரவி வர்மாவின் ஓவியங்களை தமிழ் நடிகைகளை வைத்து டிட்டோ செய்து வருகிரார்கள்.
அந்த வகையில், நடிகை சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருதிஹாசன், குஷ்பு , நதியா உள்ளிட்ட பிரபல நடிகைகள் அப்படியான ஓவியங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்கள்.
இதில், நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆகா ஓகோ என்று தங்களின் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.
அந்த வரிசையில் பாடகி சின்மயி ஓ.. மை. காட்.. என கம்மெண்ட் செய்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளார்.