தமிழில் தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகிபாபு. அவருக்கும் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.
யோகி பாபுவின் திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கும் நடிகை ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக பல தகவல்கள் கடந்த மாதம் வெளியானது.
ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய், வதந்தி என்று நடிகர் யோகி பாபு தெரிவித்திருந்தார்.
எனக்கு திருமணம் என்றால் அனைவரிடமும் தெரிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் யோகிபாபுவிற்கு திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் அடுத்த மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“யோகி இந்த தை மாசம் உங்களுக்கு கல்யாணம் நடக்கும்!” என்று ரஜினிகாந்த் கூறியதாக தர்பார் ஆடியோ லாஞ்சில் யோகிபாபு கூறினார். அது
இப்போது நிறைவேறி உள்ளது.