கேரளாவை கலக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு தமிழ் கிராமிய பாடல்.
அந்த பாடலுக்கும் குரலுக்கும் சொந்தக்காரர் கேரளாவில் அட்டப்பாடி மலைப்பகுதியில் வசிக்கும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நஞ்சம்மா (60).
கேரள அரசு கிராமிய பாடலுக்கான விருதையும் கொடுத்து கௌரவித்து இருக்கிறது.
மலையாள திரையுலகமும் மீடியாக்களும் அவரை போற்றி கொண்டிருக்கிறது.
ஆம், பிரித்திவிராஜ் மற்றும் பீஜூமேனன் நடிப்பில் சாச்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும்’ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் நஞ்சம்மாவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இவர் ‘ஐயப்பனும் கோஷியும்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு இவர் பாடிய இந்த ‘சந்தனமேரம்’ பாடல் கேரளாவில் சூப்பர் ஹிட் சாங்காக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த படத்திற்கே ப்ரமோஷன் சாங்காகவும் மாறியுள்ளது.
நஞ்சம்மா, ராணு மாண்டல் (வட மாநிலத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் பாடி திரிந்தவர்), கேரள விவசாயி ராகேஷ் உன்னி (உன்னை காணாத பாடல் விஸ்வரூபம்), பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தி போன்ற திறமை வாய்ந்தவர்கள் எங்கோ ஒரு மூலையில் இருக்கின்றனர். இவர்களுக்கு இப்போது வாழ்வில் சிறு வெளிச்சம் கிடைத்துள்ளது.