நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விடிய விடிய கண்விழித்து சிவனின் திருநாமம் சொல்லி பக்தி பாடல்கள் பாடி விரதம் மேற்கொண்டு இறைவனை அருளை பெறுவதற்கு பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.
சிவராத்திரி அன்று விரதம் இருந்தால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பல பாவங்கள் நம்மை விட்டு மிகவும் நம்மை விட்டு விலகும் என்பது நீண்டநாட்களாக தொடரும் நம்பிக்கை.
இந்நிலையில் சிவராத்திரிக்கு உரியவரான சிவபெருமான் சிவபெருமானுக்கு என்னென்ன அபிஷேகங்கள் செய்தால் புண்ணியம் பெறலாம் என பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்கள் வெல்லம் கலந்த நீரை கொண்டு அபிஷேக செய்தால் அவர்கள் நினைத்தது நடக்கும்.
ரிஷப ராசிக்காரர்கள் தயிரைக் கொண்டு அபிஷேகம் செய்தால் கடன் பிரச்சனைகளில் இருந்து மீளலாம்.
மிதுன ராசிக்காரர்கள் கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் செய்த பாவங்கள் நீங்கி நினைத்த மாதிரியான வாழ்க்கை அமையும்.
கடக ராசிக்காரர்கள் சர்க்கரை சேர்த்த பால் கொண்டு அபிஷேகம் செய்தால் விரைவில் சுப காரியங்கள் நடக்கும்.
சிம்மராசிக்காரர்கள் சிவப்பு சந்தனம் கலந்த பாலைக் கொண்டு அபிஷேகம் செய்தால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
கன்னி ராசிக்காரர்கள் பால் மற்றும் நீரால் சிவலிங்கத்தை பூஜித்தால் உடல் நலம் பெற்று நோய்கள் ஏற்படாது.
துலாம் ராசிக்காரர்கள் பசும்பால் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் செல்வம் வந்து சேரும்.
விருச்சக ராசிகாரர்கள் தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வாழ்வில் நன்மைகள் கிட்டும்.
தனுசு ராசிக்காரர்கள் குங்குமப்பூ கலந்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
மகர ராசிக்காரர்கள் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் எதிர்கால வாழ்வில் வெற்றி கிட்டும்.
கும்ப ராசிக்காரர்கள் இளநீர் அபிஷேகம் செய்தால் லாபம் கிடைக்கும்.
மீன ராசிக்காரர்கள் குங்குமப்பூ பால் கொண்டு அபிஷேகம் செய்தால் செல்வ செழிப்போடு வாழலாம்.