தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளநிலையில் அணைத்து கட்சி தலைவர்களும் தீவீர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.
அதனையடுத்து கமல்ஹாசன் தனது காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாகவும் அதன் பிறகு சில தினங்களுக்கு ஓய்வு எடுக்கப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அதன்படி அவருக்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று அறுவை சிகிச்சை நடந்தது.
இதனையடுத்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக கமல்ஹாசனின் மகள்களான சுருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் இணைந்து அறிக்கை வெளியிட்டுருந்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அணைத்து விதமான சிகிச்சைகளும் முடிந்து வீடு திரும்புவதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.