படப்பிடிப்பின்போது திடீரென்று மயங்கி விழுந்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது நகைச்சுவை நடிப்பால் அவர் தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கும் பவர்ஸ்டார் சீனிவாசன் பல கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் உதவிசெய்து மாணவர்களின் மனதில் அதிகம் இடம் பிடித்திருக்கிறார்.
செக் மோசடி உள்ளிட்ட சில பிரச்சினைகளால் சிறைக்குச் சென்று வந்தாலும் தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் படப்பிடிப்பு ஒன்றில் நடித்து வந்தபோது திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். இதையடுத்து படக்குழுவினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.
அதிக ரத்த அழுத்தம் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்து விழுந்து இருப்பதாக பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.