இந்தியாவில் பல மொழி திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனக்கென ஒருதனி இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக இவர் தமிழில் ஒஸ்தி, சந்திரமுகி, அருந்ததி போன்ற பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் சமூக வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான அணைத்து உதவிகைளையும் செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் காரோணா பரவல் அதிகமாக இருந்ததால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் புலம்பெயர் தொழிலார் தங்களின் வாழ்வாதாரங்களை தொலைத்து சொந்த ஊருக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனையடுத்து அவர்களை நடிகர்சோனு சூட் தன்னுடைய சொந்த செலவில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பிவைத்தார். அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து சொந்த உறவுகளுக்கு வரமுடியாமல் தவித்த மாணவர்களையும் தன்னுடைய சொந்த செலவில் தாயகம் அழைத்து வந்தார். பின்னர் ஏழை பெண்களுக்கு ட்ராக்டர் வாங்கித்தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துள்ளார்.
பின்னை சமூகவலைத்தளத்தில் உதவி என்று அவரிடம் கேட்க்கும் நபர்களுக்கு அணைத்து உதவிகளையும் செய்து வருகிறார். மலைவாழ் மக்களுக்கு செல்போன் வாங்கிக்கொடுத்து அதற்கென பிரத்யேக டவர் ஒன்றினையும் தன்னுடைய சொந்தச்செலவில் அமைத்துத்தந்துள்ளார்.அதனையடுத்து உதவி என்று வந்து யாரு கேட்டாலும் தயங்காமல் செய்து தரும் நபராக இருந்து வருகிறார்.
இதன் மூலம் அவர் அணைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான் இவருக்கும் பொருளாதார நெருக்கடி வந்துள்ளது. அதன் காரணமாகத்தான் சோனு சூட் மற்றும் அவரின் மனைவிக்கு சொந்தமான 2 கடைகளையும் 6 குடியிருப்புகளையும் வைத்து ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியிடம் இருந்து 10 கோடி ரூபாய் லோன் வங்கியுள்ளதாக “மணி கன்ட்ரோல்” என்ற வர்த்தக செய்தி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இவர் படத்தில் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் வில்லனாகவே இருந்தாலும் மக்கள் மத்தியில் இவர் இன்று ஹீரோவாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை.
#thamilthisai #sonusood #corona #superherosonusood