பணம் திருடியதாக பிரபல பாலிவுட் நடிகை மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2005-ல் யஹான் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மினிஷா லம்பா. இவர் கார்பரேட், ராக்கி, கிட்நாப், அனாமிகா, ஜோக்கர் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2015-ல் பூஜா பேடியின் உறவினரான தொழில் அதிபர் ரயானை மணந்த மினிஷா லம்பா கடந்த ஆண்டு விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் திருட்டு புகார் ஒன்றில் சிக்கியதாக ரகசிய தகவல் ஒன்றை மினிஷா லம்பா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் மினிஷா கூறுகையில்,
நான் நடிகையாகும் ஆசையோடு மும்பை வந்த புதிதில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். விடுதி ஒன்றில் மாத வாடகை ரூ.5 ஆயிரம் கொடுத்து தங்கி இருந்தேன். ஆனால் அந்த விடுதியின் உரிமையாளர் ஒருநாள் அவரது அலமாரியில் இருந்து நான் பணத்தை திருடிவிட்டதாக பழி சொன்னார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் பணத்தை திருடவில்லை. இதனால் 2 நாட்களில் அந்த விடுதியை விட்டு வெளியேறி மாத வாடகை 7 ஆயிரத்தில் ஒரு வீட்டை பார்த்து தங்கினேன். அந்த சம்பவத்தை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை என்றார்.
மேலும், தனது கடந்தகால உறவில் ஒரு நடிகரால் ஏமாற்றப்பட்டதையும், படவாய்ப்புக்காக சிலர் தன்னை தவறாக அணுகியதையும் நினைவு கூர்ந்தார் மினிஷா லம்பா.